தமிழக அரசு கச்சத்தீவை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது! அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார் ,கச்சதீவை மீட்பதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், நிச்சயமாக கச்சத்தீவை மீட்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய அரசு பிரதிநிதிகளுடன் நடைபெற்ற மீனவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பிய அமைச்சர் ஜெயக்குமார், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஆழ்கடலுக்குச் செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடி தொழிலில் ஈடுபட தேவையான உயர்ரக கருவிகளை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாகவும், டெல்லி கூட்டத்தில் கருத்துக்களை முன்வைத்ததாகவும், இதுபற்றி இலங்கை அரசிடம் அறிவுறுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்ததாகவும் அமைச்சர் ஜெயக்குமார் அப்போது குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment