தமிழகம், புதுச்சேரி ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரி ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக  இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு  உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றுள்ளதால் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  உள்ளது.

வானம் மேகமூட்டத்துடன் சென்னையை பொருத்தவரை  காணப்படும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு  உள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வடமேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்  என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment