காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான செயல் திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்பித்துள்ளது.
இந்த அணை கட்டுவது தொடர்பாக கூறும் கர்நாடக பெங்களூரு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக காவிரியின் குறுக்கே மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக கூறி வருகிறது.
இந்தத் திட்டம் மட்டும் நடைமுறைப்படுத்தபட்டால் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டும் நீரின் அளவு அதிகளவு குறையும் வாய்ப்பு உள்ளது இந்த அணை கட்டுவது தொடர்பாக தமிழகம் சார்பில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் மேகதாது அணை தொடர்பான செயல்திட்ட அறிக்கையை மத்திய நீர்வள அணையத்திடம் கர்நாடக அரசு திண்ணக்கமாக சமர்ப்பித்துள்ளது. இந்த திட்டத்தை5,912 கோடி செலவில் செயல்படுப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அணை கட்டுவது தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள அரசுகளை தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு மத்திய நீர்வள ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU