தமன்னா_வின் அழகுக்கு அவர் கொடுத்த பதில்..!!

நான் அழகை பராமரிக்க அக்கறை எடுத்துக்கொள்வது இல்லை என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்
தமன்னாவுக்கு ‘பாகுபலி’ திருப்புமுனை படமாக அமைந்தது. சைரா நரசிம்ம ரெட்டி என்ற சரித்திர படத்திலும், தேவி–2 என்ற திகில் படத்திலும் நடிக்கிறார். அழகாக இருப்பது பற்றி தமன்னா கூறியதாவது:–
‘‘சினிமா துறை கவர்ச்சி உலகம். இங்கு அழகு முக்கியமானது. அதை விட திறமையும் இருந்தால்தான் நிலைத்து நிற்க முடியும். 10 வருடத்துக்கு மேலாக சினிமாவில் நீடிக்கிறீர்கள். ஆனாலும் உங்கள் அழகு கொஞ்சம் கூட குறையவில்லையே என்று பலரும் கேட்கிறார்கள். அழகாக இருப்பதற்கு என்ன செய்கிறீர்கள். அந்த ரகசியத்தை சொல்லுங்கள் என்றும் கேட்கின்றனர்.
நான் அழகை பராமரிக்க அக்கறை எடுத்துக்கொள்வது இல்லை. மாலையில் படப்பிடிப்பு முடிந்து ‘பேக்கப்’ சொன்னதும் ‘மேக்கப்’பை கலைத்துவிட்டு சாதரணமான பக்கத்து வீட்டு பெண்ணாக மாறிவிடுவேன். சாதாரண பெண்கள் அழகுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ நானும் அந்த அளவுக்குத்தான் கொடுப்பேன்.
கதாநாயகியாக இருப்பதால் அழகை எப்படி காப்பாற்றிக்கொள்வது என்று எனக்கு அதிகம் தெரியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இப்போதும் அழகு வி‌ஷயத்தில் எனது தாயின் ஆலோசனைகளைத்தான் கடைபிடிக்கிறேன். அழகுக்கு பழைய காலத்து முறையைத்தான் பின்பற்றுகிறேன். அழகு சாதன பொருட்களை சினிமா படப்பிடிப்பை தவிர மற்ற நேரங்களில் பயன்படுத்துவதை தவிர்த்து விடுவேன்.’’
இவ்வாறு தமன்னா கூறினார்.
DINASUVADU 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment