தனக்கு ஆதரவாக ஆர்ப்பரித்து எழுந்த மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் இவர் நடித்து வெளியான காஞ்சனா 3 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடைப் போட்டு வருகிறது. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும், இப்படம் வெளியாகி சில நாட்களில் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதனையடுத்து, நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சமீபத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களை கிண்டலாக பேசிய சீமான் கட்சியின் ஆதரவாளரான சுரேஷ் காமாட்சி அவர்களை கண்டித்து பலரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, தனக்கு ஆதரவாக ஆர்பரித்தெழுந்த மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், காஞ்சனா படத்தை வெற்றி பெற செய்த தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ.,

.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment