தஞ்சாவூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தலித் குடியிருப்புகளை கொளுத்திய ஜாதி கும்பல்…??

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாபட்டு தெற்கு குடிக்காடு கிராமத்தில் தலித் இளைஞர்கள் ஞாயிறு அன்று மேடை ஒளி,ஒலி அமைத்து புத்தாண்டை கொண்டாடினர்.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆம்பலாபட்டு வடக்கு கிராமத்தை சேர்ந்த ஆதிக்க சாதி இளைஞர்கள் கொடிய ஆயுதங்களோடு தலித் குடியிருப்பு பகுதியில் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதோடு, வீடுகள், மோட்டார் சைக்கிள்களை உடைத்து வீசி எறிந்து விட்டு சென்றுள்ளனர். குடிதண்ணீர் பைப்புகளையும் ,மின் இணைப்புகளையும் உடைத்து வீசியுள்ளனர்.தலித் மக்கள் வீடுகளை அடைத்து கொண்டும், குடிசை வீடுகளில் வசித்தோர், கைக்குழந்தைகளுடன் கொல்லைப்புறமாக தப்பித்து ஓடி மறைந்து தங்கள் உயிர்களை பாதுகாத்துக் கொண்டுள்ளனர்.
 

படுகாயமடைந்தவர்கள் சீரங்கம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும், ராஜ்குமார் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சிபிஎம் தஞ்சை மாவட்ட செயலாளர்.கோ.நீலமேகம் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துனைத்தலைவர் எம்.சின்னதுரை, மாநில துணை பொதுசெயலாளர் சின்னை பாண்டியன் ,மாவட்ட தலைவர் அபிமன்னன், சிபிஐ,விசிக மற்றும் பொதுமக்கள் நீதி கேட்டு மறியலில் ஈடுபட்டார்கள்.
 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment