டென்மார்க் ஒபன் பேட்மிண்டன் :இறுதி சுற்றில் சாய்னா…..அரையிறுதியில் அசத்தல்….!!!

டென்மார்க் நாட்டில் நடைபெற்று வரும் பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
Image result for SAINA
டென்மார்க் நாட்டின் ஒடான்சி நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் அரையிறுதிச் சுற்றில் அவர், இந்தோனேஷியாவின் மாரீஸ்காவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
Related image
இதில் இந்தோனேஷியாவின் வீராங்கனையை 21-11, 21-12 என்ற நேர் செட் கணக்கில் சாய்னா வீழ்த்தினார். இதன் மூலம் அவர் மகளிர் ஒற்றையர் போட்டியின் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
Related image
மகளிர் ஒற்றையர் பிரிவில், காலிறுதிப் போட்டியில், ஜப்பான் வீராங்கனை ஓகுஹாராவை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை சாய்னா சாய்னா  21-16 மற்றும் 21-12 என அடுத்தடுத்த செட்களை கைப்பற்றி வெற்றி பெற்றார். இதன் மூலம் சாய்னா அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
 
 

author avatar
kavitha

Leave a Comment