ஜெயலலிதா மரணம் …!சிக்குகிறாரா துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்…!அதிரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் லிஸ்ட்

ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தையும் விசாரிக்க திட்டமிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Image result for ஓ.பன்னீர்  செல்வம் ஜெயலலிதா

இந்நிலையில்  ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது லண்டனில் இருந்து வந்து சிகிச்சை அளித்த ரிச்சர்ட் பீலே, சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை டாக்டர்கள் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வீடியோ கான்பிரன்சிங் முறையில் விசாரிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது.

Image result for ஓ.பன்னீர்  செல்வம்

அதேபோல்  ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தையும் விசாரிக்க திட்டமிட்டுள்ளது.மேலும்  அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.அதேபோல் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நேரில் விசாரிக்க ஆணையம் ஆலோசனை நடத்தி வருகின்றது.

Image result for ஆறுமுகசாமி  விசாரணை ஆணையம்

அதேபோல் ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் அக்டோபர் 24 -க்குள் விசாரணையை முடிக்க தீவிரமாகியுள்ளது.

Leave a Comment