ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் உள்ளிட்ட 4 பேர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜர்!

இன்று நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் உள்ளிட்ட 4 பேர் ஆஜராகியுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், முன்னாள் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு நபர்களை ஆணையம் விசாரித்து வருகிறது.

ஆணையம் விசாரித்த சாட்சியங்களை சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்குவிசாரணை செய்து வருகின்றனர். இன்று தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டுத்துத் துறை ஆணையர் ராமலிங்கம், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆகியோரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்து வருகிறார். சசிகலா உதவியாளர் கார்த்திகேயனும் இன்று ஆணையத்தின் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment