ஜாமீனில் வெளிவந்த ரவுடி………..தலையை வெட்டி கொலை…..போலீஸார் வலைவீச்சு…!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஜாமீனில் வெளிவந்த ரவுடியின் தலையை துண்டித்துக் கொடூர கொலை நடந்துள்ளது.
Related image
பிரபல ரவுடி தம்பாகார்த்தி என்பவன் முன்பு ஏழு பேர் கொண்ட கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டான். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் நரியம்மபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related image
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜாமினில் வெளிவந்த பிரகாஷ் பட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு தனது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தான்  அப்போது அங்கு சரக்கு வாகனத்தில் வந்த 15 பேர் கொண்ட கும்பல், பிரகாஷ் மீது நாட்டுவெடிகுண்டுகளை வீசியதோடு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவனது தலையை துண்டித்துப் படுகொலை செய்தனர்.
Related image
இந்த கொடூரகொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
DINASUVADU
 

author avatar
kavitha

Leave a Comment