ஜல்லிக்கட்டு பரிசு பொருட்களுக்கு தடை..!பரிசு தர விரும்புவோர் இதை செய்யுங்கள் -ஆட்சியர்

  • ஜல்லிக்கட்டு விழாவுக்காக பரிசு பொருட்கள் பெற  தடை விதித்து ஆட்சியர் உத்தரவு
  • நன்கொடை அளிக்க விரும்புவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்துள்ளங்கள் என்று ஆட்சியர் அதிரடி

நடப்பாண்டிற்கான ஜல்லிகட்டி போட்டி 15 தேதி நடைபெறுகிறது.இதற்கன ஏற்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் முடிக்கி விட்ட நிலையில் மற்ற மாவட்டங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.மேலும் மதுரை மாவட்டத்தில் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவச் சோதனைகள் நடைபெற்று முடிந்த நிலையில் தேர்வு செய்யப்பட்ட அனைவரும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாவட்டத்தில் ஜனவரி 15ஆம் தேதி முதல் 31ஆம்  தேதி என மொத்தம் 16 நாட்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து அரசாணை வெளியீட்டுள்ளது.இந்நிலையில் மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவுக்காக பரிசுப்பொருட்கள் பெற தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டார் மேலும் அவர் ஜல்லிக்கட்டுக்கு நன்கொடை தர விரும்புபவர்கள் ஆட்சியரின் வங்கிக்கணக்கில் செலுத்தலாம் என்றும் அவ்வாறு பரிசுப் பொருட்கள் அளிக்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் வழங்கலாம்  என்று தெரிவித்துள்ளார்.

author avatar
kavitha