ஜம்மு மற்றும் காஷ்மீரில் என்கவுண்டர்…2 தீவிரவாதிகள் சுட்டு கொலை…!!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் என்கவுண்டர் செய்து  2 தீவிரவாதிகள் இன்று சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
தெற்கு காஷ்மீரின் ஜைனபோரா நகரில் உள்ள  ரெப்பான் பகுதியில் இன்று காலை  தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடிக்கொண்டு இருந்தனர்.அப்போது
 பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் நோக்கி  துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு  பதிலடி கொடுக்கும் வகையில்  பாதுகாப்பு படையினரும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
அப்போது  பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல் கைப்பற்றப்பட்டு உள்ளன.  அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.சம்பவம் நடந்த பகுதியில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டு, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
dinasuvadu.com
author avatar
Dinasuvadu desk

Leave a Comment