ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா ?

ஜம்மு-காஷ்மீர் மெஹபூபா முப்தி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது பாஜக. கூட்டணி முறிவு தொடர்பான அறிவிப்பை பாஜக பொறுப்பாளர் ராம் மாதவ் வெளிட்டுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி செய்து வரும் முதல்வர் மெகபூபா முப்தி ஆட்சி செய்துவந்தது.

காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மெகபூபா முப்தி முதல்வராகவும், துணை முதல்வராக பாஜகவின் நிர்மல் குமார் சிங் பதவி வகித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் 87 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட பேரவையில் ஆளும் மஜ.க.வுக்கு 28, பாஜக 25 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.போர் நிறுத்தத்தை தொடருவதில் பாஜக, மஜக இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே பிடிபி கட்சிக்கான ஆதரவை பாஜக வாபஸ் பெற்றதால் ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி கவிழ வாய்ப்பு உள்ளது. 87 எம்.எல்.ஏக்கள் கொண்ட பேரவையில் பாஜகவுக்கு 25, பிடிபி கட்சிக்கு 28 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காஷ்மீரில் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க பிடிபி கட்சிக்கு 44 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment