ஜம்முகாஷ்மீரில் -தீவிரவதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில்..!!போலீசார் ஒருவர் பலி..!3 பேர் காயம்..!!

ஸ்ரீநகர் பேட்டாமாலூ (Batamaloo) பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை ஜம்மு காஷ்மீர் போலீசாரும், மத்திய பாதுகாப்புப் படையினரும் இன்று காலை சுற்றி வளைத்தனர் அப்போது தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் போலீசார் ஒருவர் கொல்லப்பட்டார்.இரண்டு வீரர்களும், மேலும் ஒரு போலீசாரும் இந்த சண்டையில் காயமடைந்தனர்.சில மணிநேரம் நீடித்த சண்டையின் முடிவில், தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
காயத்துடன் தப்பிச் சென்ற மற்றொரு தீவிரவாதியை தேடி வருகின்றனர். தீவிரவாதிகளுடனான சண்டை முடிவுக்கு வந்ததை அடுத்து,  ஸ்ரீநகரில் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டிருந்த மொபைல் இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டது.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment