எண்ணூர் அருகே உள்ள கொசஸ்தலை ஆற்று முகத்துவாரத்தில் மத்திய அரசு அனல் மின் நிலையம் கட்ட ஏற்பாடு செய்கிறது. இதனால் ஆற்றின் வழிப்பாதைகள் சுருங்கும் நிலை உருவாகிறது. வெள்ளபெருக்கு காலங்களில் தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் சென்னை மாநகருக்குள் தேங்க நேரிடும். ஆகவே மாற்றியமைக்கப்பட்ட வரைபடத்தின் மீது கவனம் செலுத்தி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் 2015 சென்னயில் ஏற்பட்ட வெள்ளத்தை விட அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனை திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.