சென்னையில் முதியவர் கொலை வழக்கில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கைது!

முதியவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் சென்னையில்  பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் உள்ளிட்ட 5 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். புளியந்தோப்பு திருவிக தெருவில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த 60 வயதான இராதாகிருஷ்ணன் என்பவர் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டார்.

செவ்வாய் கிழமை அதிகாலை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ், குபேந்திரன், ராஜேஷ், சத்யா மற்றும் ரவி ஆகிய 5 பேரை ஓசூரில் வைத்து தனிப்படையினர் கைது செய்தனர். இதனிடையே கொடுக்கப்பட்ட புகாரில் புளியந்தோப்பு போலீசார் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலையே நடந்திருக்காது என தகவல் வெளியாகிவுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment