சென்னையில் ஐபிஎல் நடந்தால் நாங்கள் நடக்க விடமாட்டோம் …!போட்டி நடந்தால் மைதானத்துக்குள் போராட்டம் வெடிக்கும் …!

தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் பி.ஆர். பாண்டியன்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐ.பி.எல் போட்டிகள் நடக்கக்கூடாது என கோரிக்கை வைத்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சமயத்தில் தமிழகத்தில் ஐ.பி.எல் போட்டியை நடத்தவிட மாட்டோம் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: காவிரி பிரச்னையில் தமிழக மக்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமென்பதே எங்களது விருப்பம்.

காவிரி போராட்டம் நடந்து வருவதால் தமிழகத்தில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். ஐ.பி.எல் போட்டிகள் தமிழகத்தில் நடக்கக்கூடாது. அவ்வாறு நடந்தால் நுழைவுச் சீட்டு பெற்றுக்கொண்டு மைதானத்திற்குள் நுழைந்து லட்சக்கணக்கான தமிழர்கள் அங்கு போராட்டம் நடத்துவார்கள். சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு போட்டியை தடுத்து நிறுத்துவோம்” என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment