சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னை : சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசா பெற தினமும் நூற்றுக்கணக்கானோர் வருகை தருகின்றனர். இந்நிலையில் இன்று காலை தூதரக அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு உள்ள தொலைபேசியில் மர்மநபர் ஒருவர் பேசினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சைபர் க்ரைம் உதவியுடன் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் செல்போன் மூலம் மிரட்ட விடுத்த நபர் சென்னையை அடுத்த மண்ணடி பகுதியை சேர்ந்த சாதிக் பாட்ஷா என்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் சாதிக் பாட்ஷாவை கைது செய்தனர். இதுகுறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் சாதிக் பாட்ஷா குடிபோதையில் இருந்ததாகவும், அப்போது என்ன செய்வது என்றே தெரியாமல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *