சென்னையிலும் தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை : போக்குவரத்து கழகம் அறிவிப்பு

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், சென்னை போக்குவரத்த்து கழகம் ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், சென்னை மக்களின் நலன் கருதி தற்காலிக ஓட்டுனர், நடத்துனர் தேவை என்றும், கனரக ஓட்டுநர், நடத்துநர் உரிமம் வைத்துள்ளோர் சான்றிதழ்களுடன் மாநகர் போக்குவரத்து கழக பணிமனை கிளை மேலாளரை அணுகுமாறும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதேபோல், திருச்சியிலும் தினக்கூலியாக ஒட்டுநர் நடத்துநர் தேவை என திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment