சூர்யா-வெற்றிமாறன் கூட்டணி உறுதி… படத்தின் பெயரை அறிவித்த வெற்றிமாறன்.!

  • நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணி உறுதியாகி உள்ளது.
  • படத்திற்கான பெயரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியீட்டுள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூர்யா ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர் என்று அரசல் புரசலாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான எந்த வொரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில் தற்போது இவர்களின் கூட்டணி உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உறுதி செய்து உள்ளார்.இது சூர்யா ரசிகர்களை குஷி படுத்திய நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படத்துக்கு வாடிவாசல் என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். படம் ஜல்லிக்கட்டு தொடர்புடைய டைட்டிலை கொண்டிருப்பதால்  ரசிகர்களிடம் இந்தப் படம் அதிக எதிர்பார்ப்பை நிச்சயம் ஏற்படுத்தும் என்பதில் எந்த வித ஐயமில்லை.

வாடிவாசல் என்ற குறுநாவலை எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதியுள்ளார்.இந்த நாவல் 1959-ம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.ஏனென்றால் ஏற்கெனவே எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை தான்  அசுரன் படமாக்கி அதில் வெற்றிமாறன் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha