சீனாவில் RYB Eduction நடத்தும் பள்ளியில் குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல்…!

சீனாவில், RYB Eduction என்ற வணிக நிறுவனம் நடத்தும், குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களில் நடந்த துஷ்பிரயோகங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அங்கு தங்க வைக்கப் பட்ட குழந்தைகளுக்கு போதைவஸ்து கொடுத்து, மருத்துவ பரிசோதனை செய்யப் பட்டதாகவும், பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாகவும் பெற்றோர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

RYB Eduction நிறுவனத்திற்கு சீனா முழுவதும் கிளைகள் உள்ளன. அதன் பங்குகள் நியூ யார்க் பங்குச் சந்தையில் விற்கப் படுகின்றன. அது நடத்தும் பராமரிப்பு நிலையங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக கொடுக்கப் படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஊழியர்களில் பலர் மாணவர்களாக அல்லது வெளிநாட்டுத் தொழிலாளர்களாக உள்ளனர்.

சந்தேகத்திற்குரிய துஷ்பிரயோகம் குறித்து புதனன்று பெற்றோர்கள் அதிகாரிகளை அழைத்தபோதே பொலிஸ் விசாரணையை ஆரம்பித்ததாக சோயங் (Chaoyang) மாவட்ட அரசு தெரிவித்துள்ளது.பெய்ஜிங் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் நடந்த முறைகேடுகள் வெளியே வந்ததால் அது தற்போது சர்வதேச செய்தியாகி விட்டது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment