சிவகாசியில் தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.73 லட்சம் பறிமுதல்…..

  • சிவகாசி பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையின் போது ரூ.73 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த தேர்தலுக்கான சிறப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம், தேர்தலை முன்னிட்டு பல விதிமுறைகளை வைத்துள்ளது. மக்களவை தேர்தலையொட்டி பணப்பட்டுவாடாவை தடுக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அனைத்து இடங்களிலும் வாகனங்கள் காவல்துறையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.சிவகாசி பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையின் போது ரூ.73 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணமின்றி தனியார் வங்கி ஏடிஎம்மில் நிரப்ப எடுத்துச் சென்ற பணத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment