சிலை கடத்தல் வழக்கு : சிபிஐ குறித்த ஆவணங்கள் நாளை தாக்கல் செய்யப்படும் …..! தமிழக அரசு உத்தரவு…!!!

சிலை கடத்தல் வலக்கை விசாரிப்பது பற்றிய சிபிஐ நிலைப்பாடு என்ன என்பதை நாளைக்குள் தெரிவிக்க சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலைகடத்தல் குறித்த தமிழக அரசின் அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது. சிலைகடத்தல் வலக்கை சிபிஐக்கு மாற்றியது குறித்த ஆவணங்கள் நாளை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.

முன்னதாக சிலைக் கடத்தல் வழக்கு ஆவணங்களை அனுப்ப மத்திய அரசு, பிரதமர் அலுவலகம் கேட்டுள்ளன. இதற்கிடையே சிலை கடத்தல் வலக்கை செப்டம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட அரசாணைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment