சிறந்த கல்வியாளர்களை வேறு மாநிலங்களில் துணை வேந்தர்களாக நியமிப்பது சகஜம்தான்…!அமைச்சர் கடம்பூர் ராஜூ….

அமைச்சர் கடம்பூர் ராஜூ  சிறந்த கல்வியாளர்களை வேறு மாநிலங்களில் துணை வேந்தர்களாக நியமிப்பது சகஜம்தான் என தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை தமிழக ஆளுநர் நியமித்தது, தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, இந்தியாவில் சிறந்து விளங்கும் கல்வியாளர்கள் பல்வேறு மாநிலங்களில் நியமிக்கப்படுவது வழக்கம் என்றும் அது போல் தான் அண்ணா பல்கலைக்கழகத்திலும் ஆளுநர் துணை வேந்தரை நியமனம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகம் நடத்தியவர்களுக்கு, காவிரிக்காக அதிமுக உண்ணாவிரதம் இருந்தது நாடகமாக தான் தெரியும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment