சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்வான பரியேறும் பெருமாள்!

இயக்குனர் பா.ரஞ்சித் முதன் முதலாக தயாரித்து வெளியாகி வசூல் ரீதியிலும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் பரியேறும் பெருமாள்.
இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தை சென்னையில் நடைபெற்ற 16வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் இப்படம் சிறந்த தமிழ் படமாகவும் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment