சசிகலா இனி எனக்கு சகோதரி கிடையாது!தினகரனின் பிளாக்மெயில் ஒன்னும் எடுபடாது!திவாகரன் நெத்தியடி

சசிகலாவின் பெயரை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் வழங்கியது தினகரனின் பிளாக்மெயில் அரசியல் .சசிகலா நோட்டீஸ் வழங்கியதால் எங்களது அரசியல் பயணம் நின்றுவிடாது ,சசிகலாவை இனி சகோதரி என அழைக்க மாட்டேன்;அவர் என் முன்னாள் சகோதரி என்று திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார் திவாகரன்.

மேலும்  ஓபிஎஸ்- சசிகலா இடையே விரோதத்தை ஏற்படுத்தியவர் தினகரன். யாரும் பிறக்கும்போது பதவியுடன் பிறப்பதில்லை. எனக்கு மனநிலை சரியில்லை என்று சொல்வது கையாலாகதத்தனம்; மனநிலை சரியில்லாத எனக்கு ஏன் நோட்டீஸ் கொடுத்தார்கள் என்று திவாகரன் கேள்வி எழுப்பி யுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment