“கொடூரமாக கொலை செய்யப்பட்ட இந்திய ராணுவ வீரர்” பாகிஸ்தான் ராணுவம் வெறிச்செயல்..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சர்வதேச எல்லையில் ராம்கார்க் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியான நடவடிக்கையில் இறங்கியுள்ளது, இந்திய எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த ராணுவ வீரரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இவ்விவகாரம் மேலும் இருநாடுகள் இடையிலான பிரச்சனையை மேலும் அதிகரிக்கும். இதனையடுத்து சர்வதேச எல்லை மற்றும் எல்லைப் பாதுகாப்பு கோடு பகுதியில் பாதுகாப்பு படைகள் உஷார் நிலையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Image result for இந்திய ராணுவ

உயிரிழந்த எல்லைப் பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் நரேந்திர குமாரின் உடலில் மூன்று இடங்களில் குண்டுகாயம் உள்ளது என அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.

ராணுவ வீரர் நரேந்திர குமார் மாயமானதை தேடும் பணியை இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் அவருடைய சடலத்தை மீட்டுள்ளது. ராணுவ வீரரின் மார்பு பகுதி, கால் பகுதியில் குண்டு காயம் உள்ளது. அவருடைய கழுத்து பாதி அறுப்பட்ட நிலையில் இருந்துள்ளது, அவருடைய உடல் முழுவதும் கத்தியால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் உள்ளது. பாகிஸ்தானின் இந்த அடாவடியான செயலுக்கு இந்திய தரப்பில் கடுமையான பதிலடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment