கைது நடவடிக்கை இருந்தால் இனி எனது முதல்வர் பினராயி விஜயன்தான்:கார்ட்டூனிஸ்ட் பாலா..

கேரளாவில் உள்ள எர்னாகுளம் பிரஸ் கிளப்,கேரளா மீடியா அகாடமி மற்றும்  கார்ட்டூனிஸ்ட்டுகள் சுதிர்,உன்னி கிருஷ்ணன் உட்பட நாடு முழுவதும் இருக்கும் கார்ட்டூனிஸ்ட்டுகள் இணைந்து கார்ட்டூனுக்காக ஒரு கார்ட்டூனிஸ்ட் கைது செய்யப்படுவதை கண்டித்து, தேசிய பத்திரிகை தினமான நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டேன்..
கேரளா கடவுள்களின் சொந்த பூமி மட்டுமல்ல.. கார்ட்டூனிஸ்ட்டுகளால் ஆசீர்வதிக்கப்பட்ட பூமியும் கூட.. எவ்வளவு கார்ட்டூனிஸ்ட்டுகள்..

அரசியல்வாதிகள் கார்ட்டூனிஸ்ட்டுகளுக்கு பிடித்தமாதிரி இருப்பது மட்டுமல்லாமல்.. கார்ட்டூன்களையும் கார்ட்டூனிஸ்ட்டுகளையும் கொண்டாடுகிறார்கள்..

டெல்லியில் ஆரம்பித்து இந்தியாவின் அத்தனை ஊடகங்களிலும் இருக்கிறார்கள்.. என் கைதுக்கு தேசியளவில் எதிர்ப்பு கிளம்ப அவர்களும் ஒரு காரணம்..

நன்றி நண்பர்களே.. மலையாளிகளான உங்களிடம் தமிழர்கள் நாங்கள் கற்றுக்கொள்ள நிறைய விசயங்கள் இருக்கின்றன..

அதில் ஒன்று உங்களிடமிருக்கும் ஒற்றுமை ..

அப்புறம் எடப்பாடி பழனிசாமி அவர்களே.. என்னை கைது செய்தே தீர்வேன் என்று அடம்பிடித்து தொடர்ந்து விரட்டினீர்கள் என்றால்.. இனி எண்ட முதல்வர் பினராயி விஜயனாக்கும்னு சொல்ல வேண்டியிருக்கும் பார்த்துக்கோங்க ஆமா.. என அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment