கேரளாவில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார்..!உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்..!!

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முதலமைச்சர் பினராயி விஜயனுடன் விமானத்தில் சென்று பார்வையிட்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், கேரளம் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான இயற்கைப் பேரிடரை சந்தித்திருப்பதாக  கூறினார். ராணுவத்தினரும், பேரிடர் மீட்புப் படையினரும் முழு மூச்சுடன் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். வெள்ளத்திற்கு இதுவரை 33 பேர் பலியாகி இருப்பதாகவும், 6 பேர் காணாமல் போயிருப்பதாகவும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் எதிர்கட்சி தலைவர் ரமேஷ்சென்னிதாலா ஆகியோர் இணைந்து சென்ற பார்வையிட்டனர்.அப்போது இணைந்து செயல்படுவோம் என்று மக்களுக்கு நம்பிக்கை அளித்தார்.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment