கேரளாவிற்கு 10 லட்சம் நிதி வழங்குகிறது தயாரிப்பாளர் சங்கம் :

கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பெருக்கால் அந்த மாநில மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து உதவிகள் குவிந்து வருகின்றனர்.தமிழ் திரைப்பட நட்ச்சத்திரங்களும் அள்ளி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கேரள வெள்ள நிவாரண நிதியாக 10 லட்சம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்காக ரூபாய் 10 லட்சத்தை வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. கேரளா மக்கள் நலம் பேர் இறைவனை பிரதிக்கிறது. அவர்கள் அனைவரும் சீக்கிரம் மீண்டு வர வாழ்த்துகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment