கூகுள் கிளவுட் தலைவராக கேரளாவை சேர்ந்தவர் நியமனம்!

கூகுளின் கிளவுட் பிரிவு தலைவராக கேரளாவை சேர்ந்த தாமஸ் குரியன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் டயானா கிரீன் என்பவர் அந்த பொறுப்பில் இருந்தார்.

இதன் பொருட்டு டயானா கிரீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தாமஸ் குரியன் நவம்பர் 26ஆம் தேதி  கூகுளில் இணைய உள்ளார். ஜனவரி 2019 இல் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள உள்ளார்.   இவர் ஏற்கனவே ஆரக்கிள் நிறுவனத்தில் 22 ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் கொண்டுள்ளவர். என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் டயானா கிரீன் என்பவர், தலைமை செயல் அதிகரியாக தொடர உள்ளார். இவர் கூகுள் நிறுவனத்தில் 2015 முதல் பணியாற்றி வருகிறார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment