“குழந்தை கணவனை கொள்” நாம் சந்தோசமாக இருக்கலாம் புலம்பும் அபிராமி…!!

சென்னை குன்றத்தூர், மூன்றாம் கட்டளைப் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரின் மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய், கார்னிகா என இரண்டு குழந்தைகள். சம்பவத்தன்று இரண்டு குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி கொலை செய்து  வீட்டைவிட்டு தப்பினார். இந்த வழக்கை குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் விசாரித்து அபிராமி, சுந்தரம் ஆகியோரை கைது செய்துள்ளனர். தற்போது அபிராமியும் சுந்தரமும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அபிராமி சிறைக்கைதிகளிடம் அழுது புலம்புவதாக தகவல் வந்து கொண்டு இருக்கின்றது.நேற்று சரியாக சாப்பிடாமல் இருந்து மனஅழுத்தத்தால் அபிராமி பாதிக்கப்பட்டதாக சிகிச்சையளித்த மருத்துவர் கூறினார்.இன்று அபிராமி சக கைதிகளிடம் அழுது புலம்பி வருகின்றாராம்.

நாம் எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டுமென்றால் உன்னுடைய குழந்தையையும் , கணவனையும் கொள் என்று சுந்தரம் சொல்லிய அந்த ஒரு வார்த்தையால் என் வாழ்க்கையே நாசமாகி விட்டதாக சக கைதிகளுடன் அபிராமி அலுத்து புலம்பி வருகிறாராம்..

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment