குதிங்கால் வெடிப்பு நீங்க இதை செய்யுங்கள்!!

தினமும்  ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு சுத்தம் செய்யவும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம்.எலுமிச்சைச் சாறு, கஸ்தூரி மஞ்சள், பயிற்றம் பருப்பு மாவு, வேப்பிலை ஆகியவற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, கால் வெடிப்பு மறைந்து, பளபளப்பாகும்.தினமும் இரவில் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதில் கால்களை ஊற வைத்து, பின்பு தேய்த்து கழுவியபின் கால்களை துடைத்துவிட்டு ஃபூட் க்ரீம் போட்டு சிறிது மசாஜ் செய்துவர கால் வெடிப்பு மறையும். கற்றாழையில் இருக்கும் வழ வழுப்பான திரவத்தை தினமும்  காலிலி்ல்  தடவி வந்தால் கால் பாதம் பளபளப்பாகும். இயற்கையிலேயே நம் உடலுக்கு ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் மருந்துகள் இருக்கின்றன. அதை சரியான முறையில் செய்து அந்த நோய்களை தீர்த்துகொள்ள்ளலாம்..

author avatar
Dinasuvadu desk

Leave a Comment