குட்கா முறைகேடு….!மாதவராவ், சீனிவாசராவ் இருவரையும் மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவு….!

குட்கா முறைகேடு வழக்கில் 7 நாட்கள் சிபிஐ காவல் முடிந்தபின் மாதவராவ், சீனிவாசராவ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.சோதனைக்கு பின்பு இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குட்கா முறைகேடு வழக்கில் 7 நாட்கள் சிபிஐ காவல் முடிந்தபின் மாதவராவ், சீனிவாசராவ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.இதன் பின்னர்  இருவரையும் மீண்டும் சிறையில் அடைக்க சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.அதேபோல் மாதவராவ் உள்ளிட்ட 5 பேருக்கு வரும் 20ஆம் தேதியுடன் நீதிமன்ற காவல் முடிவடைகிறது.

Leave a Comment