கிருஷ்ணகிரியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தோல்வி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் அனைத்து மாணவர்களும் தோல்வியடைந்த அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறியுள்ளார்.

நடப்பு ஆண்டில் தமிழகத்தில் உள்ள 2 ஆயிரத்து 574 அரசுப் பள்ளிகளில், 238 அரசுப் பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில் ஓசூர் அருகே உள்ள மாசிநாயக்கன்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 29 மாணவர்களும் தோல்வியடைந்துள்ளனர்.

ஆசிரியர் பற்றாக்குறை என கூறப்படுவதை மறுத்துள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தற்காலிக ஆசிரியர்கள் மூலம் பாடம் போதிக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment