கிரிக்கெட் மைதானத்தில் நுழைந்த பாம்பு : விருந்தாளியாக வரவேற்ற வீரர்கள்..!!

கிரிக்கெட் மைதானத்தில் நுழைந்த பாம்பு : விருந்தாளியாக வரவேற்ற வீரர்கள்..!!

இன்று காலையில் இங்கிலாந்து வீரர்கள் மைதானத்தில் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, மைதானத்திற்குள் திடீர் விருந்தாளியாக பாம்பு ஒன்று நுழைந்தது. இதனை மைதானத்தில் இருந்தவர்கள் படம் பிடித்து, ’பயிற்சியின் போது மைதானத்திற்கு வந்த திடீர் விருந்தாளி’ என்ற தலைப்பில் இங்கிலாந்து கிரிக்கெட் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.


12 நொடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவில், மைதான பராமரிப்பாளர்கள் இருவர் பைப்பில் சுற்றியிருந்த பாம்பினை தனியே பிரிக்க முயல்கின்றனர். மைதானத்தில் இருந்த மற்றவர்கள் இதனை படம் பிடிக்க முயலும் காட்சிகள் அடங்கும். இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் தற்போது இலங்கையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கெடுத்து வருகின்றனர். இவர்கள் 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
ரான்கிரீ தம்புலா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி தொடர் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது ஒருநாள் தொடரின் போதும் மழை பெய்தது இருப்பினும், 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றியடைந்தது. இதில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் 92 ரன்களை எடுத்தார்.
மேலும், 50 ஓவர்களுக்கு 278 ரன் குவித்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. இதில் மோர்கன் 11 ஃபோர் மற்றும் இரண்டு சிக்ஸினை அடித்தார். டெஸ்ட் ஆட்ட கேப்டன் ஜோயி 71 ரன்கள் எடுத்தார்.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *