காலி குடங்களுடன் இரணியல் அருகே பெண்கள் போராட்டம்..

இரணியல் அருகே கட்டிமாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட மூலச்சன் விளையில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதிக்கு சரியாக தண்ணீர் வர வில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக குழாய்கள் ஆங்காங்கே உடைந்து, குடிநீர் வராததால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் முறையாக குடிநீர் வரவில்லை. கடந்த 5 மாதங்களாக இந்த நிலை தான் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை மூலச்சன்விளையை சேர்ந்த ஏராளமான பெண்கள், காலி குடங்களுடன் அந்த பகுதியில் திரண்டு திடீரென மறியலில் ஈடுபட்டனர். தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர். இது குறித்து அறிந்ததும் இரணியல் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் குடிநீர் தட்டுபாட்டை போக்க தேவையான கோரிக்கைகளை வைத்தனர்.அவை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அங்குள்ள பெண்கள் கலைந்து சென்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment