கருத்து சுதந்திரம் இருக்கிறது..! என்பதற்காக விமானத்திற்குள் சென்று முழக்கமிடுவதா?அமைச்சர் ஜெயக்குமார்..!!

கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக விமானத்திற்குள் சென்று முழக்கமிடுவதா?என்று அமைச்சர் ஜெயக்குமார் மாணவி சோபியா விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் ஜனநாயக ரீதியில் போராடலாம்  போராட்டம் நடத்த உரிமை உண்டு, அனுமதியும் உண்டு இருந்தாலும் எதற்கும் இடம், பொருள், ஏவல் உள்ளது; ஜனநாயகத்தில் இது அனுமதிக்க முடியாத செயல் என்றும் கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக விமானத்திற்குள் சென்று முழக்கமிடுவதா?என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பேசிய அவர் விளம்பரத்திற்காக கோஷமிடுவதை அனுமதித்தால், விமானநிலையத்திற்கு செல்லும் தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். அரியணையில் யாரை ஏற்ற வேண்டும் என்று மக்களுக்கு தெரியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment