கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சிரிப்பு படம் போன்றது : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

  • கமலஹாசனை, தமிழகத்தில் வேலையில்லை என்பதால் மேற்குவங்கம் சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.
  • கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சிரிப்பு படம் போன்றது என விமர்சித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த தேர்தலுக்கான சிறப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அரசியல் கட்சியில் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்ற கட்சி தலைவர்களை குறித்து விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில், இவர் டி.டி.வி.தினகரனை குறித்து, தாலியே காட்டாமல் பொண்டாட்டி என கூறுவது தவறு. முதலில் தாலி காட்டட்டும் என்று கூறியிருந்தார். இதனையடுத்து இவர் கமலஹாசனை, தமிழகத்தில் வேலையில்லை என்பதால் மேற்குவங்கம் சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சிரிப்பு படம் போன்றது என விமர்சித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment