ஓகி புயல் காரணமாக குமரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் சாலை போக்குவரத்தும் பாதிக்கபட்டது. இந்நிலையில் கன்னியாகுமரி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.