கடத்தப்பட்ட பழம்பெரும் 6 கோடி மதிக்கதக்க முருகன் சிலை..!கப்பென்று மடக்கி பிடித்த சிலை கடத்தல் பிரிவு..!!

சென்னை ஈக்காட்டுதாங்கலில் அரக்கோணம் நெமிலி கோயிலிலிருந்து கடத்தப்பட்ட ரூ.6 கோடி மதிப்புள்ள பழமையான முருகன் சிலை கடத்திய 3 பேரை போலீஸ் கைது செய்ததுள்ளது.
சென்னை அரக்கோணம் நெமிலி கோயிலிருந்து  பழமையான முருகன் சிலை கடத்தப்பட்டது.இந்நிலையில் இந்த கடத்தல் விவகாரத்தில் களமிரங்கிய ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பழம்பெரும் முருகன் சிலையை மீட்டது.மீட்கப்பட்ட முருகன் சிலையானது சுமார் ரூ.6 கோடி மதிப்புள்ளது என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கடத்தல் தொடர்பாக சிலைகளை கடத்திய 3 கயவர்களை இஸ்மாயில், குமரி முருகேஷ், சிவக்குமார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்டு விற்க இருந்த சிலைகளை மடக்கி பிடித்த போலீசாரின் செயல் பாராட்டுக்குரியது என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
author avatar
kavitha

Leave a Comment