கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு…!!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு…!!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 50-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புயல் அறிவிப்பு காரணமாக கடந்த 7 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள், மீன்துறை அனுமதி வழங்கியதை அடுத்து, நேற்று கடலுக்கு சென்றனர். 570 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க மிகுந்த எதிர்பார்ப்போடு புறப்பட்டு சென்றனர்.
இதில், 200-க்கும் மேற்பட்ட படகுகளில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு 5 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், 50-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்தனர். இதனால், அச்சமடைந்த மீனவர்கள், வெறுங்கையுடன் கரை திரும்பினர். இலங்கை கடற்படையினரின் தொடர் நடவடிக்கை மீனவர்களிடயே அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *