ஐபிஎல் போட்டிகளை நடத்துபவர்கள், தமிழகத்தின் உணர்வுகளை மதித்து போட்டிகளை தள்ளி வைக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்…!
ஐபிஎல் போட்டிகளை நடத்துபவர்கள், தமிழகத்தின் உணர்வுகளை மதித்து போட்டிகளை தள்ளி வைக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்…!
திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் தோழமை கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், ஐபிஎல் போட்டிகளை தவிர்ப்பது நல்லது என குறிப்பிட்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், ஐபிஎல் போட்டிகளை நடத்துபவர்கள், தமிழகத்தின் உணர்வுகளை மதித்து போட்டிகளை தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.