ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தரப்படும் – முதல்வர்

  • சென்னையில் ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும்.

வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த தேர்தலுக்கான சிறப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஒவ்வொரு கட்சி தலைவர்களும் தங்களது கூட்டணி காட்சிகளை ஆதரித்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். திருவொற்றியூரில் வடசென்னை தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார்.

அப்போது பேசிய அவர், மக்களுக்கான பல நலத்திட்ட உதவிகளை அறிவித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்றும், தேர்தல் முடிந்த பின் ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment