எல்லாமே பொய்..மோடி நம்பிக்கையை இழந்து விட்டார்..முன்னாள் பிரதமர் சாடல்..!!

பிரதமர் நரேந்திர மோடி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி குறித்து விமர்சனங்கள் அடங்கிய காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் பேசியதாவது:
நாடு முழுவதும் நிகழ்ந்து வருகின்ற தொடர் வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடியின் பாஜக அரசாங்கம் மௌனம் காத்து வருகிறது. நாட்டு மக்கள் அனைவரும் மிகவும்
அச்சத்தில் உள்ளனர். இந்தியாவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. விவசாயிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விவசாயிகள் தற்கொலைகள் அதிகளவில் நிகழ்ந்துள்ளன. கடந்த 65 வருடங்களாக நிலைநாட்டப்பட்டு வந்த சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், தேசிய ஒருமைப்பாடு, பன்முகத்தன்மை உள்ளிட்டவை சீர்குலைக் கப்பட்டுள்ளது. பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களின் நம்பிக்கையை பிரதமர் மோடி இழந்துவிட்டார். முரண்பாடுகளின் பிரதமராகவே மோடி உள்ளார்.இவ்வாறு அவர் பேசினார்.
dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment