எனக்கும் கருணாநிதிக்கும் இருந்த உறவு…!! தமிழ் நடிகை பரபரப்பு பேட்டி..

எனக்கும் கருணாநிதிக்கும் இருந்த தந்தை, மகள் உறவை கொச்சைப்படுத்தப்பட்டுத்து கிறார்கள் என  கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில், குஷ்பு உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

சென்னை:

திமுகவில் அங்கம் வகித்த நடிகை குஷ்பு, மு.க.ஸ்டாலின் குறித்து சில கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் குஷ்பு வீட்டை திமுக தொண்டர்கள் தாக்கி அந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இந்த மோதலுக்கு  பிறகு குஷ்பு திமுவிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்து, அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியும் வழங்கப்பட்டது.அதிலிருந்து நடிகை  குஷ்பூ காங்கிரசில் இருந்து வருகின்றார்.அவ்வப்போது  திமுக மீது குற்றச்சாட்டுக்களையும் , விமர்சனங்களையும் பதிவிட்டு வந்தார் நடிகை குஷ்பு.

சமீபத்தில் திமுக தலைவர் மறைந்த கருணாநிதி இறப்பின் பொது  அவரது இரங்கலை வருத்தத்தோடு தெரிவித்தார். திமுக தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, ‘’இளவரசர் அரசராகிவிட்டார்” என்று தனது வாழ்த்துக்களையும் ட்விட்டரில் பதிவிட்டார் நடிகை குஷ்பு.

இந்நிலையில் சென்னை சந்தோம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி அரங்கத்தில், கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றது.இதில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு கலந்து கொண்டார்.

அப்போது பேசிய நடிகை குஷ்பு,

தமிழ்நாட்டு மக்களுக்காக இறுதி வரை போராடிய கலைஞர் கருணாநிதியிடம் இருந்துதான் நான் தமிழையும், அரசியலையும் கற்றுக்கொண்டடேன் என்றார். எனக்கு தமிழ்மொழி மீதான பற்று வருவதற்கு காரணமே கருணாநிதி என்றும், மரியாதை என்பதற்கான அர்த்தத்தையும் கருணாநிதியிடம் தான் நான  கற்றுக்கொண்டேன்  என்றார் நடிகை குஷ்பு.

தொடர்ந்து பேசிய அவர் ,

எனக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உள்ளிட்ட கொள்கைகளை கற்றுக் கொடுத்ததும் கருணாநிதிதான் என்றார்.எனக்கும் மறந்த திமுக தலைவர் கருணாநிதிக்கும் இடையே இருந்த உறவு தந்தை , மகள் உறவு ஆனால் அரசியல் நாகரிகம் தெரியாதவர்கள் அரசியலுக்க்காக அந்த உறவை கொச்சை படுத்துகிறார்கள் என வேதனையுடன் தெரிவித்தார் நடிகை குஷ்பு.இந்த நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் மற்றும் பல திரைப்பட , அரசியல் ஆளுமைகள் பங்கேற்றனர்..

 

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment