உலகம் முழுவதும் 10 லட்சம் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்…!ட்விட்டர் நிறுவனம் அதிரடி …!

ட்விட்டர் நிறுவனம் தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்கியுள்ளது.

தீவிரவாதத்திற்கு ஆதரவாக கருத்துத் தெரிவிப்பவர்களின் கணக்குகளை கடந்த 2015ம் ஆண்டு முதல் ட்விட்டர் நிறுவனம் முடக்கி வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 2 லட்சத்து 74 ஆயிரத்து 460 கணக்குகளை ட்விட்டர் முடக்கியுள்ளது.

வன்முறையைத் தூண்டும் விதமாகவும், தீவிரவாதத்திற்கு ஆதரவான கருத்துக்களை வெளிட்டதாலும் இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment