உலகநாயகன் குரலில் ஆரம்பித்து அவரது குரலிலேயே முடியவுள்ள சைரா நரசிம்ம ரெட்டி!

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தில் அமிதாபச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா, சுதீப் என பலர் நடித்துள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் ஒரே நாளில் வெளியாக உள்ளது. இதில் தமிழ் பதிப்பில் சிரஞ்சீவிக்கு அரவிந்தசாமி டப்பிங்  குரல் கொடுத்துள்ளார். அதேபோல, இந்த படம் கதை தொடக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் க கதை கூறுவதுபோல ஆரம்பித்து, இறுதி கிளைமாக்சில் அவர் குரலோடு முடிவடையும் என கூறப்படுகிறது. இதற்காக கமல்ஹாசனின் பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளதாம். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிப்பார்களா? அல்லது படம் பார்க்கும்போது ரசிகர்களுக்கு இது ஓர் இன்ப அதிர்ச்சியாக இருக்குமா என இன்னும் தெரியவில்லை.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.