உங்கள் பிட்ச் பற்றி நாங்கள் கேள்விகள் கேட்கமாட்டோம்..!நீங்களும் எங்களிடம் கேட்க வேண்டாம் : ரவிசாஸ்திரி

நடப்பு இந்திய அணி பிட்ச்கள், தட்பவெப்பம் பற்றி புகார்களையும், சாக்குபோக்குகளையும் கூறும் அணியல்ல, அதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்றும் எனது கொள்கை எளிமையானது. உங்கள் நாட்டில் நாங்கள் பிட்ச் பற்றி கேள்விகள் கேட்கமாட்டோம், எங்கள் நாட்டில் நீங்களும் கேட்காதீர்கள் என்பதே. எங்கு சென்றாலும் நன்றாக ஆடுவதில் பெருமையடைபவர்கள் நாங்கல், அயல்நாடுகளில் சிறந்த அணி என்ற பெயர் எடுக்க ஆர்வமாக உள்ளோம். ஆகவே புகார், அழுகை ஆகியவற்றை வெளிப்ப்டுத்தும் அணியாக இந்த அணி எங்கள் இந்திய அணி இருக்காது என்று இந்திய அணி தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார்.

Image result for england india testஇங்கிலாந்து நாட்டில் கிரிக்கெட் மைதானத்தின் பிட்சில் நல்ல புற்கள் வளர்க்கப்பட்டிருக்கின்றன,சாதாரணமாக இருப்பதை விட கொஞ்சம் அதிகமாகவேய உள்ளது . புற்களை வெட்ட வேண்டுமா என்று மைதானப் பராமரிப்பாளர் கேட்டார். வெட்டவே கூடாது என்று கூறிவிட்டேன், இது உங்கள் இஷ்டம், நீங்கள் கொடுக்கும் பிட்சில் நாங்கள் ஆடுகிறோம், அதுபோலவே எங்கள் நாட்டில் கொடுக்கும் பிட்சில் நீங்கள் ஆடுங்கள், கேள்வி கேட்காதீர்கள் என்று கூறினார் ரவிசாஸ்திரி.Image result for england india test

 

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment