உங்களுக்கு 30 வயது ஆகிவிட்டதா!! இதை தவீர்த்து விடுங்கள்…

உங்களுக்கு 30 வயது ஆகிவிட்டதா!! இதை தவீர்த்து விடுங்கள்…

முன்காலத்தில் ஒவொருவரும் 80 முதல் 100 வயது வரை  வாழ்ந்துவந்தனர். ஆனால் தற்போது 50 வயது தாண்டியவுடன் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத
நிலை உள்ளது. அதற்கு முக்கிய காரணம் நாம் உண்ணும் உணவு தான். ஒவொருவரும் 30 வயது அடைந்த உடன் அவர்கள் உண்ணும் உணவில் கவனம் கொள்ள வேண்டும். அவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை கிழே காண்போம்.
உடல் பருமனை உண்டாக்கும் டயட் சோடா: 
Image result for டயட் சோடா:
டயட் சோடாக்கள் குடித்தால், அது தைராய்டு ஹார்மோன்கள் மற்றும் கருவளத்தைப் பாதிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த பானங்களில் உள்ள BVO, உடலினுள் அழற்சி அல்லது வீக்கத்தை உண்டாக்கி, உடல் பருமனை உண்டாக்குமாம்.
சுகர்-ப்ரீ உணவுப் பொருட்கள்:
Related image
சுகர்-ப்ரீ உணவுப் பொருட்களில் சுவைக்காக செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருக்கும். இந்த சுவையூட்டிகள் உடலில் டாக்ஸின்களை அதிகரித்து, கல்லீரல் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தும்.
கொழுப்புக்கள் நிறைந்த பாப்கார்ன்:
Image result for பாப்கார்ன்:
பாப்கார்ன்களில் பல செயற்கை சுவையூட்டிகளை சேர்த்து பாக்கெட் போட்டு விற்கின்றனர். மேலும் சினிமா தியேட்டர்களில் விற்கப்படும் பாப்கார்னில், ட்ரான்ஸ் கொழுப்புக்கள் உள்ளன. இவை இதய நோயின் அபாயத்தை அதிகரிப்பவை.
சோயா சாஸ்:
Related image
உப்பிற்கு சிறந்த மாற்று பொருள் சோயா சாஸ். ஆனால், சோயா சாஸில் ஏராளமான அளவில் சோடியம் நிறைந்துள்ளது. ஒரு டேபிள் ஸ்பூன் சோயா சாஸில் 879 மிகி சோடியம் நிறைந்துள்ளது. ஆகவே சோயா சாஸ் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது.
author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *